சிவகுருவிடம்,
வார்த்தைஜாலம் என்பது கிடையாது – ஆனால்
அவரின் வார்த்தைகள் ஜாலம் செய்யுமே! வாசியால்
அவரை நாடினோர்க்கு
சிவகுருவிடம்,
தேவையற்ற பேச்சு என்பது கிடையாது – ஆனால்
அவரிடம் தேவையான பேச்சு கூட தேவையிராது வாசியால்
அவரை நாடினோர்க்கு
சிவகுருவிடம்,
வெறும் பேச்சு என்பது கிடையாது – ஆனால்
அவரின் ஒவ்வொரு பேச்சுக்கும் அணுக்கள் உயர்பெறும் -வாசியால்
அவரை நாடினோர்க்கு
சிவகுருவிடம்,
நோய் என்பது கிடையாது – ஆனால்
அவரிடம் எந்த நோயும் நொந்துபோகும் வாசியால்
அவரை நாடினோர்க்கு
சிவகுருவிடம்,
மருந்துகள் என்பது கிடையாது – ஆனால்
அவரிடம் மருந்தும் (தீயசக்திகள்) மண்டியிடும் வாசியால்
அவரை நாடினோர்க்கு
சிவகுருவிடம்,
பசி என்பது கிடையாது – ஆனால்
அவரிடம் பசி அறிந்து புசிக்கச்செய்திடுவார் வாசியால்
அவரை நாடினோர்க்கு
சிவகுருவிடம்,
ஆகாரம் என்பது கிடையாது – ஆனால்
அவர் உணர்த்திடுவார் “உணவே ஆதாரம் இல்லை” என – வாசியால்
அவரை நாடினோர்க்கு
சிவகுருவிடம்,
சுவைக்காக உண்பது என்பது கிடையாது – ஆனால்
அவர் தயவால் சுவையறிந்து உண்ணமுடியும் வாசியால்
அவரை நாடினோர்க்கு
சிவகுருவிடம்,
உறக்கம் என்பது கிடையாது – ஆனால்
அவரால் ஆழ்ந்த தூக்கம் கிட்டும் வாசியால்
அவரை நாடினோர்க்கு
சிவகுருவிடம்,
பயம் என்பது கிடையாது – ஆனால்
அவர் பயம்போக்கி அபயமளிபார் வாசியால்
அவரை நாடினோர்க்கு
சிவகுருவிடம்,
கவலை என்பது கிடையாது – ஆனால்
அவர் கவலையை நீக்குவார் வாசியால்
அவரை நாடினோர்க்கு
சிவகுருவிடம்,
வேதனை என்பது கிடையாது – ஆனால்
அவரது வேதனை மனிதஉடல் துயரே – தீர்ப்பார் வாசியால்
அவரை நாடினோர்க்கு
சிவகுருவிடம்,
ஆதங்கம் என்பது கிடையாது – ஆனால்
அவரது ஆதங்கம் மனிதன் உடலுண்மை உணராததே -உணர்த்திடுவார் வாசியால்
அவரை நாடினோர்க்கு
சிவகுருவிடம்,
தன்னலம் என்பது கிடையாது – ஆனால்
அவரது எண்ணம் மனிதநலம் ஒன்றில் – எண்ணிடுவாறே -வாசியால்
அவரை நாடினோர்க்கு
சிவகுருவிடம்,
எதிர்மறை எண்ணங்கள் என்பது கிடையாது – ஆனால்
அவர், அழித்திடுவார் எதிர்மறை எண்ணங்களை வாசியால்
அவரை நாடினோர்க்கு
சிவகுருவிடம்,
தீய எண்ணம் என்பது கிடையாது – ஆனால்
அவர், தம் நல்எண்ணங்களால் படைத்திடுவார் புதிய -படைப்புலகத்தை வாசியால்
அவரை நாடினோர்க்கு
சிவகுருவிடம்,
வயது என்பது கிடையாது – ஆனால்
அவர் வயதானவரையும் வயசுகுறைத்திடுவார் வாசியால்
அவரை நாடினோர்க்கு
சிவகுருவிடம்,
மந்திரம் என்பது கிடையாது – ஆனால்
அவரது பெயரே மந்திரமாய் ஒலிக்கும் வாசியால்
அவரை நாடினோர்க்கு
சிவகுருவிடம்,
வசியம் என்பது கிடையாது – ஆனால்
அவரிடம் கூட்டம் சேருமே தானாய் வாசியால்
அவரை நாடினோர்க்கு
சிவகுருவிடம்,
இல்லாதது என்பது எதுவும் கிடையாது – ஆனால்
அவரிடம் இருப்பது “மெய்” ஒன்றே -உணர்த்திடுவார் மெய்யாய்
அவரை நாடினோர்க்கு
சிவகுருவிடம்,
பந்தபாசம் என்பது கிடையாது – ஆனால்
அவரிடம் பந்தம் ஏற்படுமே தானாக வாசியால்
அவரை நாடினோர்க்கு
சிவகுருவின் பக்தை,
த.பூர்ணிமாய்
வாசியோக வில்வம் எண் : 12 09 108