சிவகுரு சிவசித்தனின் ஆசியால்
சிவசித்தனே துணை!
மெய்தவ சிவசித்த வாசியால்
தேகமே விருந்தளித்தாய்!
மெய்மொழிந்த மெய்ஒலி சிவசித்த திருநாமத்தால்
தேகசற்ப்பமதை மீட்டெடுத்தாய்!
மெய்கண்ட திருகாட்சியால் மெய்யொளியாய்
தேகஅகத்தே பூரணமாய் நிறைந்திட்டாய்!
மெய்வாசம் தானறிய தனதாற்றலால்
தனதறிவை பேரறிவாக்கி உள் நிறைந்திட்டாய்!
மெய்அன்பை தனதன்பால் உணர்த்தி
அகஆலயத்தின் கருவறையில் ஆதியாய் அலங்கரித்தாய்!
மெய்அகம் தான் கொண்ட மெய்நாதனே
என் அணுவெல்லாம் உன்னிடம் தஞ்சமே!
தன்னொளி காட்டியே கண்ணொளியால்
மெய்யொளி உணர்த்தி என்றும்
எம் மெய்யில் உறைந்த சிவசித்தனே
நின் மெய்பாதம் சரணடைகிறேன்.
சிவசித்தனே உண்மை!
நன்றி சிவசித்தனே!!!