சிவகுருவே சரணம்
சிந்தையில் சிவம் தூண்டும் சிவகுரு சிவசித்தரை
சிந்திப்பாயோ சிவகுரு சிவசித்தரை
ஆதாரம் பல தேடும் மானிடா
உனது ஆதாரம் செயல்படுவதே – சிவகுரு சிவசித்தராலே!
உனது உண்மை செயல்பட
உன்னுள் வாசியாய் – எம் சிவகுரு
உண்மை தேடினாயோ
உண்மைக்குப் புறம்பாய்!
உனது எண்ணமும் உண்மையும் செயல்பாடாகுதே
உன் அக உண்மையால்
உன்னொளி அறிய உள்ளொலிக்கு புறம்பாய் நீ
இதுவும் சிவகுரு சிவசித்தரின் எண்ணமோ!
**********************
என் எண்ணமது செம்மையாகவில்லை
ஏகாந்தமதை உணரவில்லை
கழிவது குறையவில்லை
காட்சி ஏதும் காணவில்லை
பிறவிப்பயன் பெறுவேனோ!
பிறவாநிலை அறிவேனோ!
உனதெண்ணம் என்னுள் செயலாவது எப்போது!
எற்றமதை உணர்வது எப்போது!
உண்மை தனில் நான் நிலைக்க என்னைப் பண்படுத்துவீரோ!
– சிவகுருவே.
சிவகுருவின் பக்தை,
K.B.சுபாசினி
வாசியோக வில்வம் எண்: 13 02 106