சிவகுருவே சரணம்
கவிதையாய் அறிவோம் சிவசித்தனை
கண்ணின் மணியாய் அறிவோம் சிவசித்தனை
கலங்கரை விளக்கமாய் அறிவோம் சிவசித்தனை
கரிய இருளில் ஒளிரும் பிரபஞ்சத்தில் அறிவோம் சிவசித்தனை
கட்டவிழ்ந்த மலர்வாசத்தில் அறிவோம் சிவசித்தனை
கற்பக விருட்சமாய் அறிவோம் சிவசித்தனை
கருவறை தெய்வமாய் அறிவோம் சிவசித்தனை
கண்ணீரின் கதகதப்பில் அறிவோம் சிவசித்தனை
கட்டளையின் வடிவில் அறிவோம் சிவசித்தனை
கண்ணியமான வாக்கில் அறிவோம் சிவசித்தனை
கடல் போன்ற தோற்றத்தில் அறிவோம் சிவசித்தனை
கறையில்லா பேச்சில் அறிவோம் சிவசித்தனை
___________
உண்மையின் உருவம்……
உண்மை ஒளியே அனைத்துமாய் ஆக்கியது
உண்மை ஒளியே ஆற்றலின் பாதையென அறிவித்தது
உண்மை ஒளியே இயல்பு இயல்பே இறையெனக் காட்டியது
உண்மை ஒளியே ஈதொரு மாசக்தி தானென தெரிவித்தது
உண்மை ஒளியே உய்வுக்கு வழியென உரைத்தது
உண்மை ஒளியே ஊற்றாம் பேரின்பத்தை காட்டியது
உண்மை ஒளியே எம் “சிவசித்தன்” என பறைசாற்றியது.
சிவகுரு பக்தை ,
விக்னேஸ்வரி ராஜேஷ்குமார்.
சின்னமனூர்.
வாசியோக வில்வம் எண்: 12 05 313