வணக்கம் சிவகுருசிவசித்தனே!
சிவசித்தன் வைஷ்ணவி உண்மை அன்பு – 003
சிவசித்தனை
உணர்ந்தவர் அறிவாரே
அவன் ஒவ்வொரு செயலும்
பல உயிரை காக்கவே,
நெறிப்படுத்தி,
உண்மை அன்போடு வாழவைக்கவே!
அறிவுரை கூறுவதும்,
குற்றம் குறை சொல்லுவதும்,
கேளிக்கை பேசுவதும்,
எளிதான செயலே!
உண்மையாய் இருப்பது,
அனைத்து உயிர்மேல்
அன்பு வைப்பதும்,
நம்பிக்கை வைப்பதும்,
கருணை, தியாகம் கொண்டு
செயல்படுவதும்,
ஓயாது உழைப்பது,
என்னிலையிலும்
இயற்கையின் உண்மைக்கு
மாறாது செயல்படுவது,
பிறர் நலனுக்காகவே வாழ்வது,
உணவு, பந்தம், பாசம், பொருள், பணம்
ஆகியவற்றில்
பற்று அற்று வாழ்தலும்
ஒருவனின் அன்பே
உண்மை அன்பு
அவ்வாறு வாழ்வது
இவ்வுலகில் சிவசித்தன் ஒருவனே!
அவன் உண்மை
அன்பின் ஆழம் அறிந்தவர்
அவன் வைக்கும் நம்பிக்கையின்
விளைவு புரிந்தவர்
இயற்கை உண்மைக்காக ஓயாது
அவன் உழைப்பதை காண்பவர்
அவன் எண்ணம் அற்ற
அன்பை உணர்ந்தவர்
அகம் அறியும் சிவசித்தன்
உண்மையை,
அவர்கள் உயிர்உணரும்
சிவசித்தனின் அன்பை!
உன் உண்மை அன்பை உணர்ந்தே
உன் தாள் சரணடைந்தேன்!
நன்றி சிவகுருசிவசித்தனே!