“அனைத்தையும் விட்டுவிடு“
அனைத்தையும் விட்டுவிடு – சிவசித்தன்
வாசி உணர அனைத்தையும் விட்டுவிடு
வாசியில் நீ கற்ற எதுவும் உண்மையாகாது…
வாசியில் அரிதாரம் பூச முடியாது…
வாசியில் அறியாமைக்கு இடம் கிடையாது…
வாசியில் உண்மைக்கு பலனுண்டு…
வாசியில் பழையன கழிதலே முதல்நிலை…
வாசியில் எதனோடும் எதையும் ஒப்பிடாதே…
வாசியில் சிவசித்தனின்றி செயல்பாடில்லை…
வாசியில் சூட்சுமம் கிளறினால் சூடுபடுவாய்…
வாசியில் விதிமுறையால் முறைப்படுத்தப் படுவாய்…
வாசியில் ஒழுக்கமே உண்மை உணர்த்துமே…
வாசியில் நீயே உண்மையில்லை என்றுணர்வாய்!
வாசியில் நீயாய் நின்நிலை யறிவாய்!
வாசியில் நின் தேகம் நித்தம் மலர்வாய்!
வாசியில் உன் உடல் மெலிதல் உணர்வாய்!
வாசியில் உன் உண்மை சுவாசம் காண்பாய்!
வாசியில் உன் அகம் அகமாவது உண்மை!
வாசியில் உன் உடல் உடலல்ல என்றுணர்வாய்!
வாசியின் உன் உயிர் உன்னுள் தெரிவாய்!
வாசியிடம் உண்மை இல்லையெனில் உன்னையும் வெளியேற்றும்!
“அனைத்தையும் விட்டுவிடு
சிவசித்தனிடம் – அவன்
அனைத்தையும் காட்டுவானே
சிவமாய் உன்னுள்”
சிவகுரு சேவையில்,
ந.இராமச்சந்திரன்
வாசியோக வில்வம் எண் :1312019
+919790447079