வாசியோகப் பாடல் : 3
குருவே சிவகுருவே சரணம் !
குருவே சரணம் ! சிவகுருவே …. சரணம் !
சரணம் குருவே ! சிவ சிவ சரணம் குருவே ! ….
குருவே சரணம் ! சிவ உருவே சரணம் !
சரணம் சரணம் ……. சுவாமி சிவகுருவே சரணம் !
சிவமே குருவாய் என்றும் அருள்தாய் வரமும்
என்றும் நலமாய் வாழச்செய்தாய் எனையும்
கண்டேன் உணர்ந்தேன் தாழ்பணிந்தேனே !
சரணம் சொல்லியே தினம் துதித்தேனே !
(குருவே சரணம் ! சிவகுருவே …. சரணம் !)
உலகம் இழிந்து தினம் தினம் அழிந்தபோதும்
வாழ வழியாய் எம்மை ஆளும் சிவமே !
குறைகள் என்ற மக்கள் உம்மை அடைந்து பெற்ற மோட்சமே !
சரணம் குருவே ! சிவசிவ சரணம் குருவே !
உம்மை யடையா போது ஏது இந்த மோட்சமே !
மனவலியில் உள்ள போதுமுண்டு உம்மில் நாட்டமே !
(குருவே சரணம் ! சிவகுருவே …. சரணம் !)
வாழ வழியின்றி வாழ்ந்தவர் எவரும் புதுவாழ்வுதனை
பெறுவார் குருவின் உருவினிலே !
இறந்தநிலையில் வாழும் மனிதர்க்கும் சுளிமுனை
என்னும் உயிரால் ஒளிரச் செய்திடுவாரே !
எம் குருவாம் சிவகுருநாதர் ‘சிவசித்தர்’ அருளாலே !
(சரணம் சரணம் ….. சுவாமி சிவகுருவே சரணம் )
– க. முகேஷ்.